tamilnadu

img

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது

ஈரானிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மீது, அடுத்தடுத்த பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, அந்நாட்டுடனான, அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறியது. ஈரான் மீது தனது முதல் பொருளாதார தடையை அமல்படுத்திய அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது.

இதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை, கடந்த 2-ஆம் தேதி அன்று முடிவுக்கு வந்தது. ஈரானிடமிருந்து ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்கிடையே, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, இந்தியா அடியோடு நிறுத்திக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கூறுகையில், ”ஈரான் உடனான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான காலக்கெடுவை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதால், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டதுள்ளது. மேலும், வெனிசுலா உடனான இறக்குமதியையும் நிறுத்தப்பட்டுள்ளது” என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.